Posts

ஆயில் கதை

Image
 " இன்னும் ஒரு நாள் ஓட்டியிருந்தாலும், இஞ்சின் சீஸ் ஆகியிருக்கும்!" இருசக்கர வாகன பழுது பார்ப்பவர் சொன்ன போது, குற்ற உணர்வு ஒன்று மேலெழும்பி வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மெல்லிய கருப்பு நூல் ஒன்று, இஞ்சின் அடியிலிருந்து கிளம்பி பிளாஸ்டிக் ட்ரேயில் இறங்கி, துளிகளாகக் குறுகி சொட்டிக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தேன். எப்போதும் இது போலத் தான் ஆகின்றது. தினமும் ஐம்பது கிலோமீட்டர்கள் பணி நிமித்தமாய் பயணம் செய்ய வேண்டியுள்ளது. சிறு கிராமங்கள் ஊடே, வளைந்து நெளிந்து செல்லும் சாலை. எப்போதும் நான் கணிக்கும் திசைக்கு எதிர்த் திசையில் ஒதுங்கும் ஆடுகள், நகராமல் அடம் பிடிக்கும் மாடுகள், சாலையோரத்தில் மண்ணைக் கிளறிக் கொண்டிருக்கும் கோழிகள், தவிட்டுக் குருவிகளை சிதறவிட்டபடி வண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றது. ஆயில் மாற்ற வேண்டிய கிலோமீட்டர்கள் மறந்து, அதையும் தாண்டி போய்க்கொண்டிருக்கின்றது. காலை சரியான நேரத்திற்குச் செல்ல வேண்டும், மாலை அந்தப் பேருந்தைப் பிடிக்க வேண்டும். இந்த இரண்டு சிந்தனைகளுக்கு மத்தியில் ஆயில் பற்றி எங்கே நினைப்பது?  புதிய ஆயில் குப்பியைத் திறந்து ஊற்றத் த...

அஞ்சலி இந்திரா சௌந்தரராஜன்.

Image
  பள்ளிப் பருவத்தில் கோடை விடுமுறைக்கு திருப்பூர் செல்வதற்காக அமர்ந்திருந்த பேருந்தின் சன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போது, சத்திரம் பேருந்து நிலையத்தில் கடையை மறைக்கும் அளவில் மாத நாவல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவைகளில் மாணிக்க நாகம் என்ற தலைப்பு ஈர்க்கவே, இறங்கி வாங்கினேன். இலக்கிய வாசிப்பிற்கு முந்தைய காலத்தில் ராஜேஷ் குமார், சுபா என்று வாசித்துக் கொண்டிருந்த வேளையில், கொல்லிமலை சித்தர்கள், இரசவாதம், மாணிக்கம் கக்கும் நாகம், மர்மம், அமானுஷ்யம் என்று சுவாரஸ்யமாய் இருந்தது அந்தக் கதை. அதன் பின் பழைய புத்தகக் கடைகளில் இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்களைத் தேடித் தேடி வாசித்தது மனது. எது நிஜம்? என்று பெரும்பாலான கதைகள் முடிவை நம்மிடம் விட்டுவிடுபவையாக இருக்கும். அவர் கதைகள் ஆன்மிகத்தில் உழன்று கொண்டே இருந்தது ஒரு கட்டத்தில் சலித்துப் போனது.  மாத நாவல்களில் வந்த கதைகளை விட, குங்குமம், ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களில் அவர் எழுதிய தொடர்கள் அவ்வயதில் வாசிக்க உகந்த கதைகளாக இருந்தன. விட்டுவிடு கருப்பா, கோட்டைப்புரத்து வீடு, ஐந்து வழி மூன்று வாசல், மாய நிலவு இந்த நான்கு கதை...

நினைவுப் பாதையில் ஒரு கொசு.

Image
நினைவுப் பாதையில் ஒரு கொசு. ================================ கார்முகில் புத்தக நிலைய அடுக்குகளில், அழகாய் சாய்ந்து நிற்கும் பல நூறு நூல்களுக்கிடையே புத்தகங்களைத் தேடும் போதெல்லாம் நினைவுப் பாதை கைகளில் தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கும். முதல் முறையே உள்ளே நுழைய இயலாததால், வாசிக்காமல் திருப்பி அளித்த நூல். அதன் பிறகு, வாசிக்க வேண்டும் என்ற ஆசை அவ்வப்போது தலைக்காட்டி, நான்கு முறை வீட்டிற்கு  எடுத்து வந்தும் என் தோல்வியை தன்னோடு எடுத்துக் கொண்டு, மீண்டும் அடுக்குகளில் சென்று அமர்ந்து கொண்டது. ஐந்தாவது முறையாக கடந்த வாரம் சனியன்று மீண்டும் எடுத்து வந்தேன். புத்தகத்தைத் திறந்து இரண்டு பக்கங்கள் வாசித்தால், எண்ணங்கள் எங்கெங்கோ செல்லத் தொடங்கிவிடும். நினைவுப் பாதை என்ற தலைப்பு அப்படி செய்கிறதா என்றெல்லாம் யோசித்திருந்தேன். இந்த முறை மீண்டும் முதலிலிருந்து தொடங்கி, மெல்ல மெல்ல நினைவுப் பாதையில் நகர்ந்து செல்லத் தொடங்கிவிட்டேன். இப்போது நகுலனும் நவீனனும் பின்னே நானும் என சேர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டோம். முதல் அத்தியாயம் இன்னும் முடியாத  முப்பதாவது பக்கத்தில் எப்போதோ நசுங்கி இறந்த கொசு ஒ...

எங்கதெ - இமையம்.

Image
  இமையத்தின் சிறந்த படைப்பு என பெரும்பாலானவர்கள் கூறும் கோவேறு கழுதைகள் நாவலைத்தான் முதலில் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். புத்தக நிலையத்தில் தேடும் போது , நாவல் சிறியதாக, கைகளில் தானாக வந்தமர்ந்ததால் எடுத்துக் கொண்டு வந்தேன். எங்கதெ  கணவனை இழந்த பெண்ணோடு தொடர்பில் விழுந்த ஒருவனின் வேதனைகளை சொல்லும் கதை. பேச்சு வழக்கில் செல்வதும், அத்தியாயங்களை மிகச் சிறியதாக பிரித்துள்ளதும் கதை வேகமாக நகர்கின்ற உணர்வைத் தருகின்றது.  கதை உண்மையாய் இருக்குமோ என்று தோன்றுமளவிற்கு, கதை நாயகனின் உணர்வுகள், மனதின் அலைக்கழிப்புகள் அருமையாக கூறப்பட்டுள்ளது. ஆனால் திரும்ப திரும்ப அதுவே வருவது சற்று ஆயாசமாக உள்ளது. நாயகன் இறுதியில் எடுக்கும் முடிவு, நமக்கு முன்னரே தெரியுமளவுக்கு  மனதின் வலுவற்ற தன்மையை நமக்கு உணர்த்தி விடுகிறார்.  இவ்வகை உறவில் இருக்கும் கமலாவை விட, இதை சகித்துக் கொண்டிருக்கும் அவளின்  இரண்டு மகள்கள் பற்றிய எண்ணங்கள் நம் மனதில் வருத்தமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே நாளில் வாசிக்க முடிகிற நாவல். க்ரியா பதிப்பகம் வெளியிட்ட இந்நூல் சிறப்பாக வடிவமைக்கப்பட்...

இரவு - ஜெயமோகன்.

Image
சன்னல்களில் திரை போட்டு மறைத்தும் 42 டிகிரி செல்சியஸ் வெயில் அறை முழுக்க வெப்பத்தை, ஒளியை பாய்ச்சுகிறது. உடல் முழுக்க வியர்வை கசிந்து கொண்டே இருக்கின்ற வெப்பத்தில், இவை பற்றிய எந்தவொரு உணர்வும் வராத அளவிற்கு வாசிப்பில் கட்டிப் போட்டு பிணைத்துக் கொண்ட கதை.  இரவில் விழித்தும் பகலில் உறக்கமும் கொள்ளும் இரவுலாவி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சில மனிதர்கள் பற்றிய கதை. இரவு வாழ்க்கையின் மேன்மைகளைப் பற்றி, இரவில் இயற்கையும், பொருட்களும் கொள்ளும் அழகைப் பற்றி, இரவு வாழ்க்கையில்  எல்லா உயிரினங்களும் எப்படியெல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கின்றன என விவரிக்கும் இடங்களில், அவ்வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க ஆசையும் ஏக்கமும் எழுகின்றது.  கேரளாவின் காயல் அதில் ஒடும் படகுகள், தென்னை மரங்கள் போன்றவை இரவு நேரத்தில் எத்தனை அழகாய் உள்ளன என்பதை சிறப்பான வர்ணனைகள் மூலம் கூறும் விதம் மயக்குகிறது. முதல் அத்தியாயம் முடிவதற்குள்ளாகவே நமது கவனத்தைக் கதை அள்ளி எடுத்துக் கொண்டு வேகமாக பறக்கிறது.  கதையின் ஊடாக வரும் இரண்டு யட்சிகள் அவர்களோடு உருவாகும் காதல் அதன் பின்னணியில் நாயகனின் மனம் கொள்ளும...

வாசிப்பின் பாதை-2

Image
தினமலர் இலவச இணைப்பாக வரும் சிறுவர் மலர் இதழுக்காக வீட்டின் எதிரில் உள்ள பெட்டிக் கடையில் காத்திருந்து வாசித்த படக்கதைகள், டீக்கடையில் சிந்துபாத் என  எல்லாமும் பால்யகால சகியாய் இதயத்தோடு நெருக்கமாய் இருந்தவை. ஊருக்கு ஒரே ஒரு தொலைக்காட்சி மட்டுமே இருந்த காலத்தில் இலவச இணைப்புகள், காமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்புப் பழக்கத்திற்கு விதை போட்டவை. நான்கு பேர் சேர்ந்து அமர்ந்து மாயாவி கும், கும் என்று குத்தினார். அவன் தாடையில் கபால முத்திரை பதிந்தது என படித்த நினைவுகள் இனிமையானது. ராணி காமிக்ஸின் கதைகளை விட முத்து, லயன் காமிக்ஸ் கதைகள் வித்தியாசமாய், ஆர்வத்தைத் தூண்டும் கதைகளாக இருந்தன. டெக்ஸ் வில்லர் அன்றும் இன்றும் விற்பனை, ரசிகர் கூட்டம் ஆகியவற்றில் சிறந்த நாயகராக திகழ்கிறார். இரும்புக்கை மாயாவி, டைகர், லக்கி லூக், கிட் ஆர்ட்டின், என பல நாயகர்கள் இருந்தாலும் டெக்ஸ் வில்லருக்கு இணையாக மனதைக் கவர்ந்தவர் குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் தான். வானில் பறக்கும் ஹெலி கார், வலைத் துப்பாக்கி, எப்போதும் பறக்கும் ஜெட்டை முதுகில் சுமந்தலையும் ஸ்பைடரும் அவர் குழுவினரும் செய்யும் சாகசங்கள் எப்போதும் மறக்காத...

மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ்.

Image
இந்த வார இறுதியில் தஞ்சை ப்ரகாஷின் மிஷன் தெரு வாசித்து முடித்தேன். தஞ்சை பகுதியில் பிரிட்டிஷார், முகலாயர், மராட்டியர் மூவரும் அதிகாரத்திற்காக போட்டியிடும் காலக்கட்டத்தில் நடக்கும் கதை. மன்னார்குடி சுற்றுவட்டாரத்தில் எஸ்தர் என்ற கதைநாயகியின் வாழ்வினை விவரிக்கும் விதமாய் விரியும் நாவல், அக்காலகட்டத்தில் மக்கள், குறிப்பாக பெண்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை நாவலின் மூலம் உணர முடிகிறது. அக்காலத்தில் சாதிப் படிநிலைகள் இயங்கும் விதம், கிறிஸ்துவ மிஷனரி மெல்ல மக்களிடையே பரவும் வரலாறு போன்றவை இக்கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். அக்காலத்தில் சாதாரண மக்களின் அவலநிலையினை, தற்போதைய நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது சுதந்திரம் எத்தனை சுகமான ஒன்று என்பதை விளங்கிக் கொள்ளலாம். அளவில் சிறிய நாவல், இளம்பருவத்தில் தொடங்கி, இளமையின் கொந்தளிப்பில் தவித்து, எங்கெங்கோ ஓடி இறுதியில் எஸ்தர் ஒரு தாயென மாற்றம் பெறுவதோடு முடிகிறது. கதை நடைபெறும் காலத்தின் விவரணைகள் நன்றாக இருந்தது. எஸ்தரின் மனவோட்டங்கள், வேதனைகள், தவிப்புகள் எல்லாமும் சிறப்பாக கூறப்பட்ட கதை. வாசிக்க வேண்டிய ஒன்று.