Posts

எங்கதெ - இமையம்.

Image
  இமையத்தின் சிறந்த படைப்பு என பெரும்பாலானவர்கள் கூறும் கோவேறு கழுதைகள் நாவலைத்தான் முதலில் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். புத்தக நிலையத்தில் தேடும் போது , நாவல் சிறியதாக, கைகளில் தானாக வந்தமர்ந்ததால் எடுத்துக் கொண்டு வந்தேன். எங்கதெ  கணவனை இழந்த பெண்ணோடு தொடர்பில் விழுந்த ஒருவனின் வேதனைகளை சொல்லும் கதை. பேச்சு வழக்கில் செல்வதும், அத்தியாயங்களை மிகச் சிறியதாக பிரித்துள்ளதும் கதை வேகமாக நகர்கின்ற உணர்வைத் தருகின்றது.  கதை உண்மையாய் இருக்குமோ என்று தோன்றுமளவிற்கு, கதை நாயகனின் உணர்வுகள், மனதின் அலைக்கழிப்புகள் அருமையாக கூறப்பட்டுள்ளது. ஆனால் திரும்ப திரும்ப அதுவே வருவது சற்று ஆயாசமாக உள்ளது. நாயகன் இறுதியில் எடுக்கும் முடிவு, நமக்கு முன்னரே தெரியுமளவுக்கு  மனதின் வலுவற்ற தன்மையை நமக்கு உணர்த்தி விடுகிறார்.  இவ்வகை உறவில் இருக்கும் கமலாவை விட, இதை சகித்துக் கொண்டிருக்கும் அவளின்  இரண்டு மகள்கள் பற்றிய எண்ணங்கள் நம் மனதில் வருத்தமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே நாளில் வாசிக்க முடிகிற நாவல். க்ரியா பதிப்பகம் வெளியிட்ட இந்நூல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  வாசித்துப் பார்க்கல

இரவு - ஜெயமோகன்.

Image
சன்னல்களில் திரை போட்டு மறைத்தும் 42 டிகிரி செல்சியஸ் வெயில் அறை முழுக்க வெப்பத்தை, ஒளியை பாய்ச்சுகிறது. உடல் முழுக்க வியர்வை கசிந்து கொண்டே இருக்கின்ற வெப்பத்தில், இவை பற்றிய எந்தவொரு உணர்வும் வராத அளவிற்கு வாசிப்பில் கட்டிப் போட்டு பிணைத்துக் கொண்ட கதை.  இரவில் விழித்தும் பகலில் உறக்கமும் கொள்ளும் இரவுலாவி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சில மனிதர்கள் பற்றிய கதை. இரவு வாழ்க்கையின் மேன்மைகளைப் பற்றி, இரவில் இயற்கையும், பொருட்களும் கொள்ளும் அழகைப் பற்றி, இரவு வாழ்க்கையில்  எல்லா உயிரினங்களும் எப்படியெல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கின்றன என விவரிக்கும் இடங்களில், அவ்வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க ஆசையும் ஏக்கமும் எழுகின்றது.  கேரளாவின் காயல் அதில் ஒடும் படகுகள், தென்னை மரங்கள் போன்றவை இரவு நேரத்தில் எத்தனை அழகாய் உள்ளன என்பதை சிறப்பான வர்ணனைகள் மூலம் கூறும் விதம் மயக்குகிறது. முதல் அத்தியாயம் முடிவதற்குள்ளாகவே நமது கவனத்தைக் கதை அள்ளி எடுத்துக் கொண்டு வேகமாக பறக்கிறது.  கதையின் ஊடாக வரும் இரண்டு யட்சிகள் அவர்களோடு உருவாகும் காதல் அதன் பின்னணியில் நாயகனின் மனம் கொள்ளும் வேதனைகள், ஆசிரமத்

வாசிப்பின் பாதை-2

Image
தினமலர் இலவச இணைப்பாக வரும் சிறுவர் மலர் இதழுக்காக வீட்டின் எதிரில் உள்ள பெட்டிக் கடையில் காத்திருந்து வாசித்த படக்கதைகள், டீக்கடையில் சிந்துபாத் என  எல்லாமும் பால்யகால சகியாய் இதயத்தோடு நெருக்கமாய் இருந்தவை. ஊருக்கு ஒரே ஒரு தொலைக்காட்சி மட்டுமே இருந்த காலத்தில் இலவச இணைப்புகள், காமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்புப் பழக்கத்திற்கு விதை போட்டவை. நான்கு பேர் சேர்ந்து அமர்ந்து மாயாவி கும், கும் என்று குத்தினார். அவன் தாடையில் கபால முத்திரை பதிந்தது என படித்த நினைவுகள் இனிமையானது. ராணி காமிக்ஸின் கதைகளை விட முத்து, லயன் காமிக்ஸ் கதைகள் வித்தியாசமாய், ஆர்வத்தைத் தூண்டும் கதைகளாக இருந்தன. டெக்ஸ் வில்லர் அன்றும் இன்றும் விற்பனை, ரசிகர் கூட்டம் ஆகியவற்றில் சிறந்த நாயகராக திகழ்கிறார். இரும்புக்கை மாயாவி, டைகர், லக்கி லூக், கிட் ஆர்ட்டின், என பல நாயகர்கள் இருந்தாலும் டெக்ஸ் வில்லருக்கு இணையாக மனதைக் கவர்ந்தவர் குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் தான். வானில் பறக்கும் ஹெலி கார், வலைத் துப்பாக்கி, எப்போதும் பறக்கும் ஜெட்டை முதுகில் சுமந்தலையும் ஸ்பைடரும் அவர் குழுவினரும் செய்யும் சாகசங்கள் எப்போதும் மறக்காது. இ

மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ்.

Image
இந்த வார இறுதியில் தஞ்சை ப்ரகாஷின் மிஷன் தெரு வாசித்து முடித்தேன். தஞ்சை பகுதியில் பிரிட்டிஷார், முகலாயர், மராட்டியர் மூவரும் அதிகாரத்திற்காக போட்டியிடும் காலக்கட்டத்தில் நடக்கும் கதை. மன்னார்குடி சுற்றுவட்டாரத்தில் எஸ்தர் என்ற கதைநாயகியின் வாழ்வினை விவரிக்கும் விதமாய் விரியும் நாவல், அக்காலகட்டத்தில் மக்கள், குறிப்பாக பெண்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை நாவலின் மூலம் உணர முடிகிறது. அக்காலத்தில் சாதிப் படிநிலைகள் இயங்கும் விதம், கிறிஸ்துவ மிஷனரி மெல்ல மக்களிடையே பரவும் வரலாறு போன்றவை இக்கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். அக்காலத்தில் சாதாரண மக்களின் அவலநிலையினை, தற்போதைய நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது சுதந்திரம் எத்தனை சுகமான ஒன்று என்பதை விளங்கிக் கொள்ளலாம். அளவில் சிறிய நாவல், இளம்பருவத்தில் தொடங்கி, இளமையின் கொந்தளிப்பில் தவித்து, எங்கெங்கோ ஓடி இறுதியில் எஸ்தர் ஒரு தாயென மாற்றம் பெறுவதோடு முடிகிறது. கதை நடைபெறும் காலத்தின் விவரணைகள் நன்றாக இருந்தது. எஸ்தரின் மனவோட்டங்கள், வேதனைகள், தவிப்புகள் எல்லாமும் சிறப்பாக கூறப்பட்ட கதை. வாசிக்க வேண்டிய ஒன்று.

வாசிப்பின் பாதை -1

Image
  தெப்பக்குளத்திற்கு செல்லும் இரண்டு பாதைகளில் வாணப்பட்டரை மாரியம்மன் கோவில் போகும் வழியில் ஒரு கடை, நாகநாதர் கோயில் வாசலில் ஒன்று என இரண்டு பழையப் புத்தகக் கடைகளையும் மறக்கவியலாது. பால்ய காலத்தில் என் வாசிப்பின் ஊற்றாக அந்த கடைகளை குறிப்பிடுவேன். மலை மலையாய் ராணி காமிக்ஸ் பெருகிக் கிடக்கும் கடைகள் அவை. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் விலையில் புத்தகங்களை வாங்கிக் கொண்டு படித்துவிட்டு திரும்பக் கொடுத்தால் ஐம்பது பைசா வாடகையாக கழித்துவிட்டு மீதித் தொகையை தருவார்கள். எவ்வளவு தேடினாலும் ராணி காமிக்ஸ் தவிர மீதி புத்தகங்களை கண்டுபிடிக்க முடியாது. லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் போன்றவை அங்கே இருந்திருக்கும். ஆனால் எனக்கெல்லாம் கிடைக்கவே இல்லை. கடை திறக்குமுன் சென்று காத்திருந்து தேடினாலும் கிடைத்ததில்லை. இதைத்தவிர அம்புலி மாமா, கோகுலம் தளிர் போன்றவை அவ்வப்போது கிடைக்கும். பார்வதி சித்திரக் கதைகள் புத்தகம் அரிதாக தென்படும். வார விடுமுறை நாட்களில் சென்று குவிந்து கிடக்கும் ராணி காமிக்ஸ்களில் படிக்காத புத்தகங்களைத் தேடி எடுக்கும்போது வரும் உணர்வுகள் இன்றும் பசுமையாய் வந்து போகிறது. முகமூடி வீரர் மாயாவ

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

Image
இரண்டே நாட்களில் பூக்குழி நாவலை வாசிக்க முடிந்தது. அளவில் சிறிய நாவல். கதையும் சிறியதே. நீட்டி எழுதப்பட்ட சிறுகதை போலவே உள்ளம் உணர்ந்தது. இதற்கு முன்  மாதொரு பாகன் மட்டுமே வாசித்திருக்க, இந்நாவலை இந்த வாரம் வாசிக்கத் தொடங்கினேன். ஆணவப் படுகொலை நடக்கும் மேற்கு மாவட்டங்களில், ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. குமரேசன், வேற்று சாதியைச் சார்ந்த சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அழைத்து வருகிறான். தினமும் நெல்லாஞ்சோறு சாப்பிடக் கூட வழியில்லாத கூரை வீடுகளில் வாழும் மனிதர் மனங்களில் சொந்த சாதிப் பெருமை கோபுரம் கட்டிப் பாதுகாப்பாய் வாழ்கிறது. தாய், மாமன்கள், அப்புச்சி என எல்லாரும் சரோஜாவை வெறுப்பால் விரட்டுகிறார்கள். சிறிய டவுனில் சந்தோசமாய் வாழ்ந்தவள் இந்த பாறைக்களத்தில் குமைந்து, நசிந்து குமரேசன் அன்பை மட்டுமே பிடித்துக் கொள்கிறாள். திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஊர் கூட்டத்தில் குமரேசன் குடும்பத்தைத் தள்ளி வைக்கிறார்கள். சரோஜாவின் சாதியையும் தெரிந்து கொள்கிறார்கள். திருவிழாவிற்கு முன் ஊரை சுத்தப்படுத்தி விட வேண்டுமென சரோஜாவை கொல்வதற்கு முடிவெடுக்கப்படுகிறது. சோடா கடை போடுவது தொடர்பாக மு

கிருஷ்ணப் பருந்தும் மிளிர் கல்லும்.

Image
ஒரு மாதத்திற்கு மேல் முயன்றும் சில பக்கங்களுக்கு மேல் வாசிப்பு நகராமல் இருந்த இரண்டு நாவல்களையும் இந்த வாரம் இரண்டே நாட்களில் வாசித்து நிறைவு செய்ய முடிந்தது. எழுத்தும் வாசிப்பும் இப்படி தான் ஆகிறது. நாம் முயற்சி எடுக்கும்போது நகராமல் அடம் பிடிக்க, அதுவாக ஓடும்போது நம்மை இழுத்துக் கொண்டு தலை தெறிக்க ஓடுகிறது.  இரா.முருகவேள் எழுதிய மிளிர் கல் இரண்டு அத்தியாயங்களோடு ஒரு மாதமாக காத்திருப்புப் பட்டியலில் கிடந்தது.  ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்தை வாசிக்க தொடங்கினேன். சாலைக் கடையின் பின்பக்கம் உள்ள தோப்பு விளையும், அந்தத் தோப்பின் தென்னை மரத்தில் வந்தமரும் கிருஷ்ணப் பருந்தை போலவே தனிமையில் வாழும் குருசாமியும் மனதை மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர். சிறு பிராயத்தில் தோப்பு விளைக்கு குருசாமியிடம் வரும் வேலப்பன் அவருடன் வளர்ந்து  பெரிதாகி அவரை வெறுக்கத் தொடங்குவதென  வேலப்பனைச் சுற்றி கதை நகர்கிறது. குருசாமியின் எண்ணவோட்டங்கள் வழி அவர் மனதின் மாற்றங்கள், ராணியின் பால் அவருக்கு ஏற்படும் ஈர்ப்பு என கதை வேறொரு பாதையில் பயணிக்கத் தொடங்கும்போது இரண்டாம் பகுதி தொடங்குகிறது. அதோடு நிறுத்தினேன். அட