11. தினமும் தோன்றுவதில்லை வானவில்.

 





அந்தரங்கம் புனிதமானது.


உடைந்த சுவர்களோடு
மூன்று பக்கமும்
நெடுஞ்சாலையை நோக்கி
திறந்து கிடக்கிறது
விரிவாக்கத்திற்காக
இடிக்கப்பட்ட இல்லத்தின் படுக்கையறை

எட்டிப் பார்க்காதீர்கள்.
அந்த அறையின்
கதவு
உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டுள்ளது.

அந்தரங்கம் புனிதமானது.


Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.