இரண்டே நாட்களில் பூக்குழி நாவலை வாசிக்க முடிந்தது. அளவில் சிறிய நாவல். கதையும் சிறியதே. நீட்டி எழுதப்பட்ட சிறுகதை போலவே உள்ளம் உணர்ந்தது. இதற்கு முன் மாதொரு பாகன் மட்டுமே வாசித்திருக்க, இந்நாவலை இந்த வாரம் வாசிக்கத் தொடங்கினேன். ஆணவப் படுகொலை நடக்கும் மேற்கு மாவட்டங்களில், ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. குமரேசன், வேற்று சாதியைச் சார்ந்த சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அழைத்து வருகிறான். தினமும் நெல்லாஞ்சோறு சாப்பிடக் கூட வழியில்லாத கூரை வீடுகளில் வாழும் மனிதர் மனங்களில் சொந்த சாதிப் பெருமை கோபுரம் கட்டிப் பாதுகாப்பாய் வாழ்கிறது. தாய், மாமன்கள், அப்புச்சி என எல்லாரும் சரோஜாவை வெறுப்பால் விரட்டுகிறார்கள். சிறிய டவுனில் சந்தோசமாய் வாழ்ந்தவள் இந்த பாறைக்களத்தில் குமைந்து, நசிந்து குமரேசன் அன்பை மட்டுமே பிடித்துக் கொள்கிறாள். திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஊர் கூட்டத்தில் குமரேசன் குடும்பத்தைத் தள்ளி வைக்கிறார்கள். சரோஜாவின் சாதியையும் தெரிந்து கொள்கிறார்கள். திருவிழாவிற்கு முன் ஊரை சுத்தப்படுத்தி விட வேண்டுமென சரோஜாவை கொல்வதற்கு முடிவெடுக்கப்படுகிறது. சோடா கடை போடுவது தொடர்பா...
சமயபுரம் டோல்கேட்டில், காலை 6.50 க்கு பஸ். எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் கொள்ளிடம் பாலத்தைத் தாண்டிக் கொண்டிருந்தேன். பாலத்தின் இரு புறமும் பிரம்மாண்ட ஓர வளைவுகள், தூண்களோடு வேகமாகக் கடந்து சென்றன. கீழே காவிரியின் உபரி நீரை முக்கொம்பு மேலணையில், கொள்ளிடத்தில் திருப்பி விட்டதால், இரு கரையும் நிறைத்து, ஒரு பழுப்பு நிற யானையைப் போல, மெல்ல அசைந்து நகர்ந்து கொண்டிருந்தது. மென் தூறலும், ஈரமும் துணையாக வர, சில்லென்று வீசும் ஈரக்காற்றில் அவசரக் குளியலின் ஈரம் காய்ந்தது. வண்டியை ஸ்டாண்டில் விட்டு, எடை மிகுந்த பேரங்காடி பையுடன் நிறுத்தத்தை அடைந்தேன். முதுகில் ஒரு பை. அங்கேயே உள்ள பூக்கடையில் பொன்னிறத்தில் மாலைகள், ரோஜா மலர்கள் கலந்து கட்டி தொங்கிக் கொண்டிருந்தது. தேனீக்கள் பறந்து பறந்து ரோஜாக்களை முட்டிக் கொண்டிருந்தன. அவைகளின் முதுகில் மஞ்சள் நிற துகள்கள். பூக்கடைக்காரரின் கைகள் இயந்திர வேகத்துடன், ஒழுங்குடன் மலர்களை கட்டிக் கொண்டிருக்க, சுவாரஸ்யமாக அருகில் பேசிக் கொண்டிருந்தார். பின்னணியில் புத்தம் புது காலை..., பொன்னிற வேளை.., பண்பலையில் பாடல் தேர்வு செய்பவர்கள் ரசனையுள்ளவர்கள்...
இலைப் பறவை. இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. பறவைகள் வருவது குறைந்து விட்டது. மரங்கள் தனிமையை உணரும் கோடை. நிழலின் பரப்புக் குறைய மரத்தினடியில் ஊறும் எறும்புகள், பூச்சிகளை காணவில்லை. ஈரம் காய்ந்து நகரும் புழுக்களை விரட்டிவிட்டது. அணில்களின் கீச்சொலி, வாலை அடிக்கும் துள்ளல்கள் இல்லை. அனல் காற்று வீசுகையில் இலைகள் தரையிலிருந்து எழும்பி சிறகை விரிக்கின்றன. ஒவ்வொரு மரத்திலிருந்தும் பழுப்பு நிற, சிவப்பு நிற, மஞ்சள் நிற இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. நீண்ட நாள் தங்கியதால் அலுப்படைந்தது போல இலைகள் எழுந்து பறந்து செல்கின்றன மரத்திலிருந்து. தரையில் காய்ந்த இலைகள் மரத்தை நோக்கி தவம் புரிகின்றன. ஒரே இடத்தில் மூன்று மணி நேரங்கள் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்து, இலைகளை உதிர்க்கும் பருவத்தில் இருக்கும் மரத்தை கம்பிகள் போட்ட பெரிய சன்னல் வழியே பார்த்துக் கொண்டே இருக்கும் வாய்ப்பு, மனதில் பல திறப்புகளைத் தருகிறது. அந்த மரத்தை நான் உற்று நோக்குவது அதற்கு தெரிகிறதா? என்னை அதுவும் பார்த்துக் கொண்டிருக்கிறதா? அனல் பறக்கும் பகல் பொழுதில், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உதிர்த்துக் கொண்டிருக்கும் மர...
Comments
Post a Comment