சன்னல்களில் திரை போட்டு மறைத்தும் 42 டிகிரி செல்சியஸ் வெயில் அறை முழுக்க வெப்பத்தை, ஒளியை பாய்ச்சுகிறது. உடல் முழுக்க வியர்வை கசிந்து கொண்டே இருக்கின்ற வெப்பத்தில், இவை பற்றிய எந்தவொரு உணர்வும் வராத அளவிற்கு வாசிப்பில் கட்டிப் போட்டு பிணைத்துக் கொண்ட கதை. இரவில் விழித்தும் பகலில் உறக்கமும் கொள்ளும் இரவுலாவி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சில மனிதர்கள் பற்றிய கதை. இரவு வாழ்க்கையின் மேன்மைகளைப் பற்றி, இரவில் இயற்கையும், பொருட்களும் கொள்ளும் அழகைப் பற்றி, இரவு வாழ்க்கையில் எல்லா உயிரினங்களும் எப்படியெல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கின்றன என விவரிக்கும் இடங்களில், அவ்வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க ஆசையும் ஏக்கமும் எழுகின்றது. கேரளாவின் காயல் அதில் ஒடும் படகுகள், தென்னை மரங்கள் போன்றவை இரவு நேரத்தில் எத்தனை அழகாய் உள்ளன என்பதை சிறப்பான வர்ணனைகள் மூலம் கூறும் விதம் மயக்குகிறது. முதல் அத்தியாயம் முடிவதற்குள்ளாகவே நமது கவனத்தைக் கதை அள்ளி எடுத்துக் கொண்டு வேகமாக பறக்கிறது. கதையின் ஊடாக வரும் இரண்டு யட்சிகள் அவர்களோடு உருவாகும் காதல் அதன் பின்னணியில் நாயகனின் மனம் கொள்ளும...
Comments
Post a Comment