கவிதை- சாலை...,

சாலை...,

நான் இங்கே தான்
கிடக்கிறேன்.
இரவிலும், பகலிலும்
கடும் கோடையிலும்,
குளிரிலும்
புயலடித்த போதும்,
பெருமழைக் காலத்திலும்,
பெருந்தொற்று வந்து
நீங்கள் பதுங்கு
குழிகளில் இருக்கையிலும்,
நான் இங்கே தான் 
கிடக்கிறேன்.

தற்போது தனிமையில்,
ஆளரவமற்று...!

கவலையில்லை.
துணைக்கு சில
புள்ளினங்கள் உள்ளன.

நான் காத்திருக்கிறேன்,
மீண்டு வருக...!

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.