பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு
இரண்டே நாட்களில் பூக்குழி நாவலை வாசிக்க முடிந்தது. அளவில் சிறிய நாவல். கதையும் சிறியதே. நீட்டி எழுதப்பட்ட சிறுகதை போலவே உள்ளம் உணர்ந்தது. இதற்கு முன் மாதொரு பாகன் மட்டுமே வாசித்திருக்க, இந்நாவலை இந்த வாரம் வாசிக்கத் தொடங்கினேன். ஆணவப் படுகொலை நடக்கும் மேற்கு மாவட்டங்களில், ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. குமரேசன், வேற்று சாதியைச் சார்ந்த சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அழைத்து வருகிறான். தினமும் நெல்லாஞ்சோறு சாப்பிடக் கூட வழியில்லாத கூரை வீடுகளில் வாழும் மனிதர் மனங்களில் சொந்த சாதிப் பெருமை கோபுரம் கட்டிப் பாதுகாப்பாய் வாழ்கிறது. தாய், மாமன்கள், அப்புச்சி என எல்லாரும் சரோஜாவை வெறுப்பால் விரட்டுகிறார்கள். சிறிய டவுனில் சந்தோசமாய் வாழ்ந்தவள் இந்த பாறைக்களத்தில் குமைந்து, நசிந்து குமரேசன் அன்பை மட்டுமே பிடித்துக் கொள்கிறாள். திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஊர் கூட்டத்தில் குமரேசன் குடும்பத்தைத் தள்ளி வைக்கிறார்கள். சரோஜாவின் சாதியையும் தெரிந்து கொள்கிறார்கள். திருவிழாவிற்கு முன் ஊரை சுத்தப்படுத்தி விட வேண்டுமென சரோஜாவை கொல்வதற்கு முடிவெடுக்கப்படுகிறது. சோடா கடை போடுவது தொடர்பா...

Comments
Post a Comment