இலைப் பறவை. இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. பறவைகள் வருவது குறைந்து விட்டது. மரங்கள் தனிமையை உணரும் கோடை. நிழலின் பரப்புக் குறைய மரத்தினடியில் ஊறும் எறும்புகள், பூச்சிகளை காணவில்லை. ஈரம் காய்ந்து நகரும் புழுக்களை விரட்டிவிட்டது. அணில்களின் கீச்சொலி, வாலை அடிக்கும் துள்ளல்கள் இல்லை. அனல் காற்று வீசுகையில் இலைகள் தரையிலிருந்து எழும்பி சிறகை விரிக்கின்றன. ஒவ்வொரு மரத்திலிருந்தும் பழுப்பு நிற, சிவப்பு நிற, மஞ்சள் நிற இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. நீண்ட நாள் தங்கியதால் அலுப்படைந்தது போல இலைகள் எழுந்து பறந்து செல்கின்றன மரத்திலிருந்து. தரையில் காய்ந்த இலைகள் மரத்தை நோக்கி தவம் புரிகின்றன. ஒரே இடத்தில் மூன்று மணி நேரங்கள் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்து, இலைகளை உதிர்க்கும் பருவத்தில் இருக்கும் மரத்தை கம்பிகள் போட்ட பெரிய சன்னல் வழியே பார்த்துக் கொண்டே இருக்கும் வாய்ப்பு, மனதில் பல திறப்புகளைத் தருகிறது. அந்த மரத்தை நான் உற்று நோக்குவது அதற்கு தெரிகிறதா? என்னை அதுவும் பார்த்துக் கொண்டிருக்கிறதா? அனல் பறக்கும் பகல் பொழுதில், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உதிர்த்துக் கொண்டிருக்கும் மர...
சமயபுரம் டோல்கேட்டில், காலை 6.50 க்கு பஸ். எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் கொள்ளிடம் பாலத்தைத் தாண்டிக் கொண்டிருந்தேன். பாலத்தின் இரு புறமும் பிரம்மாண்ட ஓர வளைவுகள், தூண்களோடு வேகமாகக் கடந்து சென்றன. கீழே காவிரியின் உபரி நீரை முக்கொம்பு மேலணையில், கொள்ளிடத்தில் திருப்பி விட்டதால், இரு கரையும் நிறைத்து, ஒரு பழுப்பு நிற யானையைப் போல, மெல்ல அசைந்து நகர்ந்து கொண்டிருந்தது. மென் தூறலும், ஈரமும் துணையாக வர, சில்லென்று வீசும் ஈரக்காற்றில் அவசரக் குளியலின் ஈரம் காய்ந்தது. வண்டியை ஸ்டாண்டில் விட்டு, எடை மிகுந்த பேரங்காடி பையுடன் நிறுத்தத்தை அடைந்தேன். முதுகில் ஒரு பை. அங்கேயே உள்ள பூக்கடையில் பொன்னிறத்தில் மாலைகள், ரோஜா மலர்கள் கலந்து கட்டி தொங்கிக் கொண்டிருந்தது. தேனீக்கள் பறந்து பறந்து ரோஜாக்களை முட்டிக் கொண்டிருந்தன. அவைகளின் முதுகில் மஞ்சள் நிற துகள்கள். பூக்கடைக்காரரின் கைகள் இயந்திர வேகத்துடன், ஒழுங்குடன் மலர்களை கட்டிக் கொண்டிருக்க, சுவாரஸ்யமாக அருகில் பேசிக் கொண்டிருந்தார். பின்னணியில் புத்தம் புது காலை..., பொன்னிற வேளை.., பண்பலையில் பாடல் தேர்வு செய்பவர்கள் ரசனையுள்ளவர்கள்...
மழையின் பெயர். பேருந்துக்கு வெளியே மழை. சன்னலில் மழை என்று எழுதினேன். என்ன என்றது? உன் பெயர் என்றேன். வல இடதாய் உள்ளது வாசிக்க முடியவில்லை. எழுத்துக்களை என்னிடமே வீசியது. திருப்பி எழுதினேன். எழுத்துக்களை மகிழ்ச்சியாய் எடுத்துக் கொண்டது மழை. மழையின் இதயம் விரல் நுனியில் ஒட்டிக் கொண்டது.
Comments
Post a Comment